28 June 2008

"இது வேலைக்கு ஆவாதும்மா.. !"

நம்ம மொக்கை ஒரு டாக்டர்.. அதுவும் குழந்தைகளுக்கான வைத்தியர். அவரிடம் சிகிச்சைக்கு வரும் குழந்தைகளிடம் விளையாட்டாகப் பேசி, மருத்துவம் செய்வார். அதில் அவருக்குப் பெருமையும் கூட.
ஒருநாள் ஒரு பெண் தன் 3 வயது பையனை சிகிச்சைக்கு அழைத்து வந்தாள்.வழக்கம்போல, டாக்டர்.மொக்கை, அந்தச் சிறுவனிடம் தன் வேலையைக் காட்டினார். 00
அவன் காதைப் பிடித்து.." ஏண்டா கொழந்தே..இதுதானே உன் மூக்கு..?" என்று கேட்க,
அவரை சற்று வினோதமாக ஏறிட்ட சிறுவன் தன் அன்னையிடம் திரும்பிச் சொன்னான்.."இது வேலைக்கு ஆவாதும்மா.. இதுக்கு காது எது.. மூக்கு எதுன்னே தெரியல.. இதுகிட்டேயெல்லாம் என்னை

இப்படிக்கு.. உங்கள் நினைவில் வாடும் மனைவி.

பிரியமுள்ள கணவருக்கு,
வீட்டைப் பத்திரமாகப் பூட்டிக்கொண்டு போகிறீர்களா? புழக்கடையிலேயே சோப்பை வைத்துவிட்டுப் போய் விடாதீர்கள். வெய்யிலில் அது சாந்து மாதிரி ஆகிவிடும். வலை பீரோவை நன்றாகக் கவனிக்கவும். ஏதேனும் எறும்புகள் தென்படுகின்றனவா? வலை பீரோவின் கால்களுக்கு மறக்காமல் தண்ணீர் ஊற்றவும். கொஞ்சம் நெய் வைத்துவிட்டு வந்திருந்தேன். அதை என்ன செய்தீர்கள்? ஊறுகாய் கெடாமலிருக்கிறதா?
சலவைக்காரன் வந்தானா? பழைய பாக்கி துணிகளில் இரண்டு கொண்டு வரவேண்டும். மூன்றரையணா அவனே நமக்குத் தரவேண்டும். இந்தத் தடவை மொத்தமாக எத்தனை துணி போட்டீர்கள்? மூன்றாவது வீட்டிலே அந்தப் பையன் ஞானசம்பந்தம் அடிக்கடி வருகிறானா? அவன் வந்தால் நீங்கள் கூடவே இருங்கள். அவன் போன பிறகு எல்லாம் சரியாயிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். (அவனை வீட்டுக்குள் விடாமலிருப்பது ரொம்பவும் நல்லது.) எதிர்வீட்டில் 'காரம் போர்டு' வாங்கிக் கொண்டு போனார்கள். திருப்பிக் கொடுத்து விட்டார்களா? திருப்பிக் கொடுத்திருந்தால் காயினெல்லாம் சரியாயிருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவும். ராத்திரியில் ரேடியோ கேட்கவேண்டாம். அணைக்க மறந்து போய் அப்படியே தூங்கிவிடுவீர்கள்.சாயிபாபா படத்துக்குப் பிரேம் போட்டு விட்டீர்களா? பிரேம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்பது என் அபிப்பிராயம். பிரேம் போடுகிற பணத்துக்கு புதிதாகவே வாங்கி விடலாம். காற்றில் ஜன்னல் அடித்துக் கொள்கிறதா? அதற்கு வைப்பதற்காக அளவாக ஒரு சின்னச் செங்கல் வைத்திருந்தேனே? அது இருக்கிறதா? படார் படாரென்று இரண்டு தடவை அடித்துக் கொண்டால் கதவு போய்விடும். ஜன்னல் திரையை நீங்களே சோப்புப் போட்டுத் துவைத்து விடுங்கள். சலவைக்குப் போனால் வருவதற்கு நாளாகும்.
புத்தக அலமாரிக்குச் சற்றுத் தள்ளி ஓட்டுப் பக்கமிருந்து வாலோடியாக ஒரு கரையான் சரம் இறங்கியிருந்ததே அதைத் தட்டிச் சுத்தம் செய்தீர்களா? சிறிது மண்ணெண்ணெய் புட்டியில் இருந்ததெல்லாம் தீர்ந்து விட்டதா? காப்பி போட்டுக் கொள்வதற்காகத் தினமும் எவ்வளவு மண்ணெண்ணெய் உபயோகப்படுத்துகிறீர்கள்? ஞபாகமாக ஆபீஸ் போகும்போது அடுப்பை அணைத்துவிட்டுப் போகவும். ஈரத்துணியை மழை வரும் போலிருந்தால் வீட்டுக்குள்ளேயே உலர்த்திவிட்டுச் செல்லவும். காய்ந்த துணிகளை மாலையில் ஆபீஸ் விட்டு வந்ததும் எடுத்து வைத்துவிடவும். மீட்டர் கட்டணம் எவ்வளவு ஆயிற்று? போன மாதத்தில் பணத்தை வரவு வைக்காமல் விட்டுவிட்டது பற்றி 'கம்ப்ளைண்ட்' செய்தீர்கலா

16 June 2008

*நங்கள் ஏழு பேரு ஓர் குடையின் கீழ் நடந்தோம்.
ஆனா ஒருத்தர் கூட நனையவில்லை எப்படி??
*மழையே பெய்யவில்லை


*டாக்டர் கதை எழுதினால் எப்படி எழுதுவார்??
*சாப்பாட்டுக்கு முன்பு,சாப்பாட்டுக்கு பின்பு

*பல் ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்??
*சொத்தையோட போகணும்


*குரைக்கிற நாய் கடிக்காது ஏன் தெரியுமா??
*ரெண்டு வேலையையும் ஒரே நேரத்துல அதால ரெண்டு வேலையும் செய்ய முடியாது


*நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடித்து விட்டார்களாம் ஏன்??
*யாரோ இங்க தமிழ் வாத்தியார் யாருன்னு கேட்டதுக்கு அடியேன் அடியேன் தான்னு சொல்லி இருக்காராம்

அப்பா: எக்ஸாம் ஹால்ல தூங்கிட்டு வரியே வெக்கமா இல்லை??
மகன்: நீங்கதானே சொன்னீங்க கேள்விகளுக்கு விடை தெரியலேன்னா முழிச்சிகிட்டு இருக்காதேடனு அதான் தூங்கினேன்

உங்க பையன் கோவிலுக்கு போனால் அதிகமா பொய் சொல்றானே ஏன்?
அவன் கோவில்ல மெய் மறந்துடுவான்

ஒரு காட்டில் வறுமை தாண்டவம் ஆடியது..

ஒரு காட்டில் வறுமை தாண்டவம் ஆடியது.. ஆமாங்க.. காட்டில்தான்.. அங்க பிரச்னை என்னன்னா சிங்கம் புலி, சிறுத்தை இதுகல்லாம் நிறைய இருந்துச்சுங்க. அதுக அடிச்சுத் தின்னதான் சின்ன மிருகம் எதுவுமே இல்லே..

இப்படி இருக்கையில், ஒருநாள் ஒரு சிறுத்தை வாயெல்லாம் ரத்தம் ஒழுக வந்துச்சு. மற்ற மிருகமெல்லாம் சுத்தி வளைச்சு கொக்கி போட்டுச்சு.

"மவனே.. நீ மட்டும் எங்க போய் முழுங்கிட்டு வரே..? ஒழுங்கா சொல்லிடு..!"

ஹீரோ சிறுத்தை , "போங்கப்பா ... எனக்கு தூக்கம் வருது.. காலையில் பார்த்துக்கலாம்"ன்னு சொல்லிட்டு தன்னோட குகைக்குள்ள போய் தூங்கிடுச்சு.

"பய நல்லா தின்னுட்டு வந்து களைப்பா தூங்கிட்டான்.. "

புலம்பிகிட்டே மத்த மிருகம் எல்லாம் குகை வாசலிலேயே தேவுடு காத்தன. விடிந்தது. ஹீரோ வெளியே வந்துச்சு.

"இப்பவாவது சொல்லித்தொலையேண்டா சனியனே..!" சிங்கம் உறுமியது.

"'நேற்று கீழ் காட்டுக்கு போயிருந்தேனா..." ஹீரோ இழுத்தது.

"அந்தக் கதையெல்லாம் வேண்டாம்.. வா.. இடத்தைக் காட்டு.." புலி பரபரத்தது.

ஹீரோ எல்லோரையும் அழைச்சுட்டுப் போச்சு. சும்மா இல்ல .. 65 கிலோ மீட்டர் ஸ்பீடுல.. வடிவேலு போல ஸ்பீடைக் குறைக்காம போயிட்டுருக்கும்போது, ஹீரோ ஒரு மாந்தோப்பை காட்டுச்சு.

எந்த இடம்டா.. சீக்கிரம் சொல்லு.. சிங்கம் சிடுசிடுத்தது.

அதோ நடு மரம் இருக்குதே உங்களுக்கு தெரியுதா..?

வேகத்தைக் குறைக்காத விலங்குகள் சொல்லின.. "ம்ம்ம் தெரியுது.. தெரியுது.. எல்லா விலங்கும் கூட்டு பாடின.

ஒரு பெருமூச்சை வெளியிட்ட ஹீரோ சொன்னது..

"நேற்று நானும் இதே வேகத்தில் வந்தபோது பசி மயக்கத்தில் எனக்கு அந்த மரம் தெரியலேப்பா.. அதான் வாயெல்லாம் ரத்தம்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"
அப்பு: டே! நான் காட்டுல சிங்கத்தை பாத்தேன்.அது முதுகுல எச்சு துப்பினேன் சுப்பு:ஆமாம்டா நான் கூட காட்டுல சிங்கத்தை பாத்தேன். அதோட முதுக தடவினேன் ஈரமா இருந்தது . அது நீ செஞ்சதுதானா??

டாக்டர்:நாய் கடிச்சால் தொப்புள சுத்தி பதினான்கு ஊசி போடணும்
நோயாளி: முடியாது டாக்டர்
டாக்டர்" ஏன்??
நோயாளி: நாய் ஓடி போய்டுச்சு டாக்டர்

லெட்டர் ல நிற்க நிற்கனு எழுதாதீங்க.
ஏன்?? பாவம் படிக்கிறவங்களுக்கு கால் வலிக்க போகுது

ஆசிரியர்: பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனை சுத்துமா??இல்லை சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியை சுத்துமா??
மாணவன்: எனக்கு தலை சுத்துது சார்

வக்கீல் : கொலை எங்கே நடந்தது??
சாட்சி: திருப்பதியில
வக்கீல்:இப்படி மொட்டையா சொன்னா எப்படி??

பெரியசாமி: எங்க தலைவர் திறந்த புத்தகம் மாதிரி
சின்னசாமி: அதான் நேத்து ரோட்ல போட்டு ஆளாளுக்கு புரட்டிக்கிட்டு இருந்தாங்களோ??

எல்லா மொழிகளையும் பேச கூயது எது??
எதிரொலி

பக்கத்து தியேட்டர்ல ஆட்டுகார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க??
நம்ம தியேட்டர் ல பாயும் புலி ஒடுதுல்ல அதான்
கம்ப்யூட்டர் படிச்சாதான் இனிமேல் வேலை கிடைக்கும்
அப்ப நீ படிச்சா வேலை கிடைக்காத??

ஆசிரியர்: எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு
மாணவன்: பி, சி, டி,எப்
ஆசிரியர்: டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??
மாணவன்: அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்

பதில் எழுதும் முறை
ஒருவன் எழுதிய கடிதத்தின் கடைசி வரி,இந்த கடிதம் உனக்கு கிடைக்காவிட்டால் உடனே எனக்கு கடிதம் எழுது

பாத்திரம்
ஏங்க அண்டா குண்டா எல்லாம் விக்குறீங்க?? என்னோட பையன் பட்டணத்தில சின்ன பாத்திரத்துல நடிக்கிறானாம் .செலவுக்கு பணம் அனுப்ப சொன்னான்

படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்
யார் வில்லனா?? கதாநாயகனா??
தயாரிப்பாளர்

வீட்டுக்கு போன மறந்தாபுல தூங்கிடுறேன் டாக்டர்....
நல்லதுதானே
திருட போன வீட்டுல தூங்கின மாட்டிக்க மாட்டேனா டாக்டர்

நீங்க சென்னை வாசிதானே??
எப்படி கண்டுபுடிசீங்க??
பைப்ல தண்ணி வரத கடவுள பாக்குற மாதிரி பாக்குறீங்க

ஆசிரியர்:ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??
மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்

ஆசிரியர்:உண்மைக்கு எதிர்பதம் என்னனு உங்க பையன் கிட்ட கேட்டா தெரியலை சொல்லுறன்
அம்மா: ஆமாம் சார் அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார்

எக்ஸ்ட்ரா ப்ரீமியம் பெட்ரோல்....!

நம்ம மிஸ்டர். மொக்கை ஒருநாள் அலுவலகத்திலிருந்து களைப்பா வீட்டுக்கு வரும்போது, வழியில் ஒரு அழகான பொண்ணு, திரிஷா மாதிரி அழகுன்னு வச்சுக்கங்களேன்.. மொக்கையைப் பார்த்து கையசைத்து கூப்பிட்டாள்.. மொக்கை ஜொள்ளிகிட்டே போய் " வாட் கேன் ஐ டு ஃபார் யூ..?" என்று கேட்டார்..

ஹாய்.. ஹேண்ட்சம்..(????!).. ஒரு சின்ன ஹெல்ப்.. என் கார்ல பெட்ரோல் தீந்துடுச்சு.. கொஞ்சம் பங்க் வரை தள்ளிட்டு வரமுடியுமா..?

மொக்கை, வடிவேலு போல மனசுக்குள்ள, " ஹூக்கும்... எப்புடிதான் கண்டுபுடிக்கிறாளுகளோ...!"ன்னு நெனச்சுகிட்டாலும், வெளியில காட்டிக்காம "ஷ்யூர்.. வொய் நாட்..?"ன்னு சொல்லி தள்ள ஆரம்பிச்சார். த்ரிஷா ட்ரைவிங் சீட்ல உக்காந்துகிட்டு வண்டியை ஸ்டீயர் பண்ணுச்சு.

வண்டி தள்ளி... தள்ளி... மொக்கைக்கு நாக்கு தள்ள ஆரம்பிச்சுடுச்சு. ரொம்ப தூரம் தள்ளிட்டு வந்த மொக்கை, கொஞ்சம் பக்கவாட்டுல திரும்பிப் பார்த்தார்.. ஒரு பெட்ரோல் பங்கை தாண்டி வண்டி போய்கிட்டு இருக்கறதைப் பார்த்து கடுப்பாயிட்டார்.. உடனே தள்ளறதை நிறுத்திட்டு, முன்னால ஓடிப்போய்...

"ஏம்மா.. உனக்கே இது நல்லா இருக்கா..? அதோ ஒரு பங்க் இருக்குல்ல.. அங்க போகாம நீ பாட்டுக்கு போய்கிட்டு இருக்கியே.. என்று குமுறினார்..

"திரிஷா" சொன்னாள்.. " அந்த பங்க்ல எக்ஸ்ட்ரா ப்ரீமியம் பெட்ரோல் இருக்காது டார்லிங்.. சாதா பெட்ரோல் என் மாருதிக்கு ஒத்துக்காது.. அடுத்த தெருவில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு.. ப்ளீஸ்.. என் கண்ணுல்ல...கொஞ்சம் தள்ளிட்டு வாங்களேன் !"