30 November 2008

துணுக்குகள்....

"வக்கீல் சார்... வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது."

"ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?"

--------------------------------------------

இப்ப வரும் தர்மா மீட்டர்ல சிலது தப்பு தப்பா ஜுரம் காட்டுதாமே டாக்டர்?"

"ஆமாம். 'அதர்மா' மீட்டரா இருக்கு!"

---------------------------------------------

"என்ன மொக்கை... பாதி ராத்திரியில் வீடேறி வந்து எழுப்பி எதுக்காக கோணிப் பை இருக்கான்னு கேட்கறீங்க?"

"எங்க வீட்டுக்கு வந்திருக்கிற திருடன்தான் கேட்கச் சொன்னான். திருடின பொருளை மூட்டை கட்ட வேணுமாம்...."

----------------------------------------------

"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."

"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"

-----------------------------------------------

"இருக்கற வீட்டை உயில்ல எழுதி வைக்கப் போறீங்களா! யார் பேருக்கு?"

"வீட்டு சொந்தக்காரன் பேருக்குத்தான். என் மறைவுக்குப் பிறகு அவனே இதை அனுபவிக்க வேண்டியதுன்னு உயில் எழுதிடப் போறேன்!"

------------------------------------------------

"ஆபரேஷன் ஆன பிறகுதான் மயக்கம் தருவீங்களா! ஏன் நர்சம்மா இப்பட சொல்றீங்கி?"

"மயக்கம் கொடுக்கிற டாக்டர் ரெண்டு மணி நேரம் லேட்டாகத்தான் வருவாராம். அதுக்குள்ளே ஆப்ரேஷன் பண்ற டாக்டர் அவசரப்படறார்.. வேற ஒரு ஆபரேஷனுக்கு போகணுமாம்..!

---------------------------------------------

"பேய்னா அது சாதாரணமா பாழடைஞ்ச பங்களாலதானே இருக்கும்? இந்தப் பேய் மட்டும் ஏன் பாழடைஞ்ச குடிசையில இருக்கு?"

"இது ஏழைப் பேயாம்!"

---------------------------------------------

28 November 2008

இது வேலைக்கு ஆகாது...!

மூன்று ஜோடிகள் சொர்க்கத்தின் வாயிற்கதவைத் தட்டினர்.. வாயிற்காவலன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்..

முதல் ஜோடியில் ஆண் : நாங்கள் உள்ளே போகலாமா..?

வாயிற்காவலன் : கூடாது.. நீ வாழ்நாள் முழுதும் மண்ணாசை பிடித்துத் திரிந்தாய்.. மேலும் நீ மருதன் என்று நிலத்தின் பெயரையே கொண்டிருக்கிறாய்.. திரும்பிப் போ..!

2வது இணையில் ஆண் : நாங்களாவது........?

வாயிற்காவலன் : இயலாது.. முதல் ஜோடியாவது பரவாயில்லை.. நீ பொன்னாசை வெறி பிடித்து அலைந்தவன்.. மேலும் உன் பெயர் முத்தன். போ... போ..!

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த மூன்றாவது ஜோடி பெண் தன் ஆண் இணையைப் பார்த்து சொன்னாள்..

"சுக'ந்தா..! இது வேலைக்கு ஆகாது.. வா.. போவோம்..!"

நன்றி அரசர் நகைச்சுவை

25 November 2008

மிஸ்டர்.மொக்கை..!

மிஸ்டர்.மொக்கை மோட்டார் சைக்கிளில் மனைவியோடு சாலையில் போனார். கொஞ்சதூரம் போனபின், ஒரு போலீஸ் கார் அவரைத் துரத்தி வந்து வழிமறித்தது.. அதிர்ச்சியடைந்த மொக்கை என்னவென்று விசாரிக்க, அதிகாரி சொன்னார்..

"என்னா மேன்.. உன் மிசஸ் 5 கிலோ மீட்டருக்கு அப்பால் பைக்லேருந்து கீழே விழுந்துட்டாங்க. அதுகூட தெரியாம வந்துகிட்டு இருக்கே..!

மொக்கை பதிலளித்தார்..

கடவுளுக்கு நன்றி.. என் காதுதான் செவிடாயிடுச்சோ என்னமோன்னு பயந்துட்டேன்.. அவ தொணதொணப்பு என் காதில் கொஞ்ச நேரமா கேட்கலியேன்னு..!
______________________________________________________________

மொக்கையின் நண்பர் : அந்தக் கட்சிப் பத்திரிகையில் வேலை செய்துகிட்டு இருந்தியே.. இப்போ திடீர்ன்னு நிறுத்திட்டாங்களாமே.. என்ன ஆச்சு..?

மொக்கை : 'தலைவர் பதிலளிக்கிறார்'ன்னு அச்சுக் கோக்கறதுக்கு பதிலா, 'தலைவர் பல்லிளிக்கிறார்'ன்னு கோத்து தொலச்சிட்டேன்..!

22 November 2008

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்..

"கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்..

"குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"

மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..! திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்..

"என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

நன்றி அரசர் நகைச்சுவை

20 November 2008

பெரிசா தைச்சுடாதீங்க....

எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

xxxxxxxxxxxxxxxx

நீங்க சமயத்துல செஞ்ச உதவிக்கு என் தோலை செருப்பா தைச்சுப் போடணும் சார்....

வெரிகுட்! என் செருப்பு அளவு எட்டு. மறந்து பெரிசா தைச்சுடாதீங்க....

xxxxxxxxxxxxxxxxx

மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.

பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!

18 November 2008

வாயில்லா ஜீவன்..!

திருமதி.மொக்கையும், ஜூனியர் மொக்கையும் ஒரு ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்துக்குச் சென்றிருந்தனர். திருமதி.மொக்ஸ் மிகவும் விலை உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத் தேர்வு செய்தாள். இதைப் பார்த்த ஜூனியர் மொக்கை சொன்னான்..

அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை வாங்குவதன் மூலம் உன்னை அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரிய, வாயில்லா ஜீவனுக்கு தீங்கு இழைக்கிறாய்..!

திருமதி. மொக்கை சொன்னாள்..

கவலைப்படாதே குட்டி மொக்கை.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக செலுத்தவேண்டியதில்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..!

நன்றி அரசர் நகைச்சுவை

15 November 2008

'நம்ம தலைவரு.......

நமது நாற்பது தொகுதி வேட்பாளர்கள் பட்டியலைப் பார்த்து மக்கள் என்ன பேசிக்கிறாங்க?''

''அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஞாபகத்துக்கு வர்றதா சொல்றாங்க தலைவரே!''
________________________________________________________________

''நம்ம தலைவரு இதுக்கு முன்னாடி இந்தத் தொகுதியில பல பேரை டெபாசிட் இழக்க வெச்சிருக்காரு..!''

''அவ்வளவு செல்வாக்கு உள்ள தலைவரா...?''

''இல்லய்யா... ·பைனான்ஸ் கம்பெனி வெச்சிருந்தவரு!''
________________________________________________________________

''நாட்டில் இருக்குற விலைவாசி உயர்வு தலைவரை ரொம்பப் பாதிச்சுடுச்சாம்...''

''அவருக்கு அவ்ளோ இரக்க குணமா?''

''ஒரு வோட்டுக்கு ஐந்து, பத்து கொடுத்த காலம் போய்... இப்ப நூறு ஐந்நூறு கொடுக்க வேண்டியதா இருக்கேன்னு வருத்தப்படுறார்!''
________________________________________________________________

''தலைவரே... செல்போன்ல ஏன் வைப்ரேஷன் வெச்சுத் தொலைச்சீங்க... பாருங்க. நீங்க உதர்றதைப் பார்த்து தோல்வி பயத்துல உதர்றதா எதிர்க்கட்சிகள் சொல்றாங்க!''
________________________________________________________________

13 November 2008

காபியை மறந்துட்டுப் போறீங்களே..!

மிஸ்டர்.மொக்கை தாயகம் திரும்பிக்கொண்டிருந்தார். அது ஒரு இடைநில்லா வானூர்தி.சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தது. விமானிகள் அறையிலிருக்கும் ஒலிவாங்கி இயங்கிக் கொண்டிருப்பது தெரியாமல், ஒரு விமானி மற்றவரிடம் சொன்னார்..

ரொம்ப களைப்பா இருக்குப்பா..! இந்த மீட்டர்களையும், மானிட்டர்களையும் பார்த்து பார்த்து அலுத்துப் போயிடுச்சுப்பா.. ஒரு ஸ்ட்ராங் காப்பியும், ஒரு அழகான பொண்ணும் இப்போ இருந்தா.. அவள் மடியில் படுத்துகிட்டு காபியை அனுபவிச்சு குடிப்பேன்..!

இந்த உரையாடல் பயணிகள் பகுதியில் தெளிவாக ஒலிபரப்பு ஆவதைக் கவனித்த ஒரு விமானப் பணிப்பெண் விமானிகளை எச்சரிப்பதற்காக அவசரமாக விமானிகள் அறையை நோக்கி ஓடினாள்..

இதைக் கவனித்த மொக்கை சொன்னார்..

"மிஸ்.. காபியை மறந்துட்டுப் போறீங்களே.. அதையும் எடுத்துட்டு போங்க..!"

நன்றி அரசர் நகைச்சுவை

10 November 2008

துணுக்குகள்

100 வயதுவரை வாழ்வது எப்படிங்கற புத்தகத்தை கொடுத்தவரை உன் தாத்தா திட்ட‌றாரே ஏன்?

அவருக்கு வயது 102.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

என்ன எலுமிச்சம்பழம் இவ்ளுண்டுதான் இருக்கு?

இது எலுமிச்சம்பழம் இல்லங்க சாத்துக்குடி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஜட்ஜ் : சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?

திருடன் : ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்?

அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில்
நடக்கும் வியாதியாம்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இந்த கார் வாங்கினதில இருந்து ரிப்பேருக்காக
ஒரு ரூபாய் கூட கொடுக்கல தெரியுமா...!

அப்படித்தான் மெக்கானிக்கும் சொன்னான்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

செவிட்டு மெஷின்......

மிஸ்டர்.மொக்கைக்கு மனைவியிடம் அறை வாங்கியதில் காது செவிடாகிவிட்டது. செவிட்டு மெஷின் வாங்கக் கடைக்குப் போனார்.. கடைக்காரர் பல மாடல்களை எடுத்துக்காட்டினார்..

இதைப் போட்டுப் பாருங்க சார்.. காதுக்குள்ளேயே வச்சுக்கலாம்.. வெளில தெரியாது.. விலை 5000 ரூபாய்..

ரொம்ப விலை அதிகமாருக்கே..

இதைப் பாருங்க.. காது மடலுக்கு வெளில வச்சுக்கலாம்.. ரொம்பத் தெளிவா கேட்கும்.. விலை 3000 ரூபாய்..

200 ரூபாய்ல ஒண்ணும் இல்லையா..?

மொக்கையை ஒரு தடவை முறைத்துப் பார்த்த கடைக்காரர் சோப்புப் பெட்டி போன்ற ஒன்றையும் ஒரு ஒயரையும் எடுத்துக் கொடுத்தார்..

இது நல்லா கேட்குமா..?

கேட்காது.. இது பழய மாடல்.. ரிப்பேர் வேற..

அப்புறம் எப்படி எனக்கு காதில் விழும்..?

இது உன்கிட்ட இருக்கறதைப் பார்த்தாலே, அவனவன் கத்திப் பேசுவான்.. நீ காதில் வாங்கிக்கலாம்..!


நன்றி அரசு

09 November 2008

விமானிகள் இல்லா விமானம்..

உலகின் முதல் கணிணி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும் பயணிகள் விமானம் தன் வெள்ளோட்டத்தைத் துவக்க இருந்தது. விமானிகளோ, பணியாளர்களோ எவரும் இலர். தானியங்கிப் படிகள் மூலம் விமானத்துக்குள் நுழைந்த 200 பயணிகள் தங்கள் பயணச்சீட்டில் குறிக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். படிகள் விலகி, கதவுகள் தாமாகவே தாழிட்டுக் கொண்டன.

விமானம் ஓடுபாதையில் பயணத்தைத் துவக்கி, விண்ணில் எழும்பியபோது, விமானத்துக்குள் பதிவு செய்யப்பட்ட கணிணிக்குரல் பயணிகளை வரவேற்றது..

வணக்கம் சீமான்களே.. சீமாட்டிகளே.. !

1800 கோடி டாலர் அற்புதமான தானியங்கி விமானத்தின் முதல் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். உங்கள் பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட இருக்கிறது.

இவ்விமானத்தின் அனைத்து இயக்கங்களும் கணிணி மூலம் துல்லியமாக இயக்கப்படுகின்றன. எல்லாமே சிறப்பாகவும் சரியாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. எதுவுமே தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்..கடக்.. தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்.. கடக்.. தவறிப் போக வாய்ப்பே.. க்ரீச்..க்ரீச்.. க்ரீச்.. கடக்... வாய்ப்பே...க்ரீச்.. க்ரீச்..!