02 December 2008

துணுக்குகள்...

மொக்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..

"சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?"

"இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"

_______________________________________________________________


அந்த காலத்துல, ஞானிகளும், முனிவர்களும் பசி தூக்கம் பாராமல், பச்சைத்தண்ணி குடிக்காமல், குடும்பத்தக்கூட நெனைக்காம, சிரிப்பு கொண்டாட்டம் இல்லாம தவம் இருப்பாங்க..

இப்பவும் அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க.. அவங்க பேரு..

மென்பொருள் பொறியாளர்கள்..!

_______________________________________________________________


மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..

முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!

_______________________________________________________________

ரொம்ப லவ் ஏன் ஃபெயிலியர் ஆகுது தெரியுமா..?

ஒரு ஆளு அதிகமான அளவுல காதலிச்சாலும்,
இன்னொரு பார்ட்டி, அதிகமான ஆளுகளைக் காதலிக்கிறதுனாலதான்..!

நன்றி அரசர் நகைச்சுவை

No comments: