18 November 2008

வாயில்லா ஜீவன்..!

திருமதி.மொக்கையும், ஜூனியர் மொக்கையும் ஒரு ஆடம்பரப் பொருட்கள் விற்பனையகத்துக்குச் சென்றிருந்தனர். திருமதி.மொக்ஸ் மிகவும் விலை உயர்ந்த, அபூர்வ விலங்கினத்தின் தோலால் செய்யப்பட்ட மேலாடை ஒன்றைத் தேர்வு செய்தாள். இதைப் பார்த்த ஜூனியர் மொக்கை சொன்னான்..

அம்மா.. உனக்குத் தெரியுமா..? இந்த மேலாடைகளை வாங்குவதன் மூலம் உன்னை அறியாமலே ஒரு பரிதாபத்துக்குரிய, வாயில்லா ஜீவனுக்கு தீங்கு இழைக்கிறாய்..!

திருமதி. மொக்கை சொன்னாள்..

கவலைப்படாதே குட்டி மொக்கை.. இதற்கான பணத்தை உன் தந்தை உடனடியாக செலுத்தவேண்டியதில்லை. சுலபத்தவணைகளில் மெதுவாக செலுத்தலாம்..!

நன்றி அரசர் நகைச்சுவை