09 November 2008

விமானிகள் இல்லா விமானம்..

உலகின் முதல் கணிணி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும் பயணிகள் விமானம் தன் வெள்ளோட்டத்தைத் துவக்க இருந்தது. விமானிகளோ, பணியாளர்களோ எவரும் இலர். தானியங்கிப் படிகள் மூலம் விமானத்துக்குள் நுழைந்த 200 பயணிகள் தங்கள் பயணச்சீட்டில் குறிக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். படிகள் விலகி, கதவுகள் தாமாகவே தாழிட்டுக் கொண்டன.

விமானம் ஓடுபாதையில் பயணத்தைத் துவக்கி, விண்ணில் எழும்பியபோது, விமானத்துக்குள் பதிவு செய்யப்பட்ட கணிணிக்குரல் பயணிகளை வரவேற்றது..

வணக்கம் சீமான்களே.. சீமாட்டிகளே.. !

1800 கோடி டாலர் அற்புதமான தானியங்கி விமானத்தின் முதல் சோதனை ஓட்டத்தில் பங்கேற்றிருக்கும் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள். உங்கள் பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட இருக்கிறது.

இவ்விமானத்தின் அனைத்து இயக்கங்களும் கணிணி மூலம் துல்லியமாக இயக்கப்படுகின்றன. எல்லாமே சிறப்பாகவும் சரியாகவும் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. எதுவுமே தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்..கடக்.. தவறிப் போக வாய்ப்பே இல்லை.. க்ரீச்.. கடக்.. தவறிப் போக வாய்ப்பே.. க்ரீச்..க்ரீச்.. க்ரீச்.. கடக்... வாய்ப்பே...க்ரீச்.. க்ரீச்..!

No comments: